பேருந்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு…

published 8 months ago

பேருந்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் இந்துமதி(57). இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க பேருந்தில் சென்றார். 

அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி உள்ளனர். நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த இந்துமதி இது குறித்து சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe