கோவையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…

published 8 months ago

கோவையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…

கோவை: கோவையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 

கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை போலீசார் சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அந்த குடோனில் 133 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சங்கர்லால் மகன் ஜூஹாரமல்(43) என்பவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe