வடவள்ளி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது…

published 8 months ago

வடவள்ளி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது…

கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்சாத்(21). இவர் வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சம்சாத் வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார். 

அப்போது நைசாக உள்ளே நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சம்சாத் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், செல்போனை திருடியது கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த தனியார் ஊழியர்கள் ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe