தலைகாட்டாத அண்ணாமலை!

published 8 months ago

தலைகாட்டாத அண்ணாமலை!

கோவை: கோவை வாக்கு எண்ணும் மையத்திற்கு அண்ணாமலை காலையில் இருந்தே வரவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் 20 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்களோடு திமுக., அதிமுக.,வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

ஆனால், காலையில் இருந்தே பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரவில்லை. காலையில் இருந்து நடைபெற்ற ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட அண்ணாமலை முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அவர் கோவையில் இருந்துகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை எட்டிப்பார்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe