கோவை மாநகரில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு; கனமழை அலெர்ட்!

published 8 months ago

கோவை மாநகரில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு; கனமழை அலெர்ட்!

கோவை: கோவை மாநகர பகுதிகளில் இன்று மாலைக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே மாநகரின் சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

இதனிடையே நேற்றும் முகூர்த்த தினம் என்பதால் நேற்று மாலை முதலே மாநகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

இன்று முகூர்த்த தினம் என்பதாலும், விடுமுறை முடியும் நாள் என்பதாலும் திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் மாலைக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

அவ்வாறு, மழை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும்.

பணி நிமித்தமாக வெளியே சென்றிருக்கும் உங்கள் துணைக்கும், சுற்றத்தாருக்கும் இம்முன்னறிவிப்பை பகிரவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe