பக்ரீத் பண்டிகையையொட்டி களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை...

published 8 months ago

பக்ரீத்  பண்டிகையையொட்டி களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை...

கோவை: கோவை மாவட்டம்,  அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தையில் விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

 

இங்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும்   ஆடுகளை வாங்க  சந்தையில் திரண்டுள்ள வியாபாரிகள் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு,  மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். 

குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe