கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி கணக்காளரிடம் ரூ.28 லட்சம் சுருட்டல்!

published 8 months ago

கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி கணக்காளரிடம் ரூ.28 லட்சம் சுருட்டல்!

கோவை: கோவையில் முதலீட்டில் அதிக லாபம் என கூறி ரூ. 28.50 லட்சம் மோசடி  நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(24). தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.

அதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, புதியதாக துவங்க உள்ள பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்ய விரும்பிய லோகேஷ் தனது விவரங்களை அதில் பதிவு செய்தார். தொடர்ந்து அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 28,63,000 முதலீடு செய்தார்.

ஆனால் அந்த நபர் கூறியபடி, எந்த விதமான லாப தொகையும் லோகேசுக்கு கிடைக்கவில்லை. தான் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. பங்கு சந்தை முதலீட்டில் லாபம் என கூறி மொத்தமாக ரூ. 28,63,000 சுருட்டி விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த லோகேஷ் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe