கோவையில் சிக்கியது விபசார கும்பல்! இளம்பெண்கள் உட்பட 6 பேர் கைது!

published 7 months ago

கோவையில் சிக்கியது விபசார கும்பல்! இளம்பெண்கள் உட்பட 6 பேர் கைது!

கோவை: கோவையில் மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்து வந்த இளம்பெண்கள் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மசக்காளிபாளையம் டி.ஜே. நகரில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்குள்ள 4வது மாடியில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பீளமேடு போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு மசாஜ் செய்ய வரும் வாலிபர்களை ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களை காட்டி விபசாரத்திற்கு அழைப்பு விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் மற்றும் அழகிகளான சுங்கம் பைபாஸ் ரோடு ஸ்ரீ நகரை சேர்ந்த முகமத் ஆசிப் (25), அவரது மனைவி சுமையா பேகம் (25), நாகாலாந்தை சேர்ந்த மாயா (32), சிவானந்தா காலனியை சேர்ந்த லில்லி (28), கொல்கத்தாவை சேர்ந்த டெபலினா தாஸ் (37) மற்றும் ஈரோட்டை சேர்ந்த சஹானா (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய நபரான சேகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe