எஸ்.பி.வேலுமணி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

published 7 months ago

எஸ்.பி.வேலுமணி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கோவையில் அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கோவையிலும் அதிமுக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக., எம்.எல்.ஏ-க்கள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe