கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...

published 7 months ago

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...

கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் ஆசிரியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில்  தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90% ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டு உள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண்: 243 ஐ இரத்து செய்திட தமிழக அரசை வலியுறுத்தி அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு கவனஈர்ப்பு நடவடிக்கைகளை டிட்டோஜாக் பேரமைப்பு மேற்கொண்டது. 

அரசின் உயர் அலுவலர்களும் மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்த நிலையில் தற்போது மேற்படி அரசாணையினை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை  தமிழக முதலமைச்சர், பள்ளி கல்வித் துறை அமைச்சர் இதனை பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe