கோவையில் தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொடூர கொலை : கொள்ளையர்கள் வெறிச்செயல்

published 2 years ago

கோவையில் தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொடூர கொலை : கொள்ளையர்கள் வெறிச்செயல்

 

கோவை: கோவையில் தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு படுகொலை செய்து நகை திருடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள சிந்தாமணி புதூர், காந்திநகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சரோஜினி (82)இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

சரோஜினியின் கணவர் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சரோஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று மதியம் செல்வ லட்சுமிபுரத்தில் வசிக்கும் சரோஜினியின் மூத்த மகன் ரவிச்சந்திரனுக்கு செல்போனில் பேசினார். உங்கள் அம்மா காலையில் இருந்து வீட்டிற்கு வெளியே வரவில்லை. பால் பாக்கெட் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக தாய் சரோஜினி வீட்டிற்கு வந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது சரோஜினியின் கைகள், கால்கள் கட்டபட்டு வாய் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டபட்டிருந்தது. உடனே அவர் அருகில் சென்று பார்த்த போது சரோஜினி பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் சரோஜினியை மர்ம நபர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு வாயை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி, கொலை செய்து விட்டு அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, விரலில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe