மழை வெள்ளத்தில் தப்பிய கோவை!

published 7 months ago

மழை வெள்ளத்தில் தப்பிய கோவை!

கோவை: கோவையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாநகரில் ஒரு மணி நேர கனமழைக்கே பாலங்கள், சாலைகள், முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

குறிப்பாக வடகோவை, உப்பிலிபாளையம், கிக்கானி, 
லங்கா கார்னர் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்குவதும், இதில் வாகன ஓட்டிகள் சிக்கித்தவிப்பதும் தொடர் கதையாக இருந்தது.

இதனிடையே மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மழைநீர் வடிகாலை மேம்படுத்தி, முறைப்படுத்தும் பணியைத் துரிதமாக மேற்கொண்டார்.

இதனால் கோவையின் முக்கிய இடங்களில் மழை நீர் தேங்காமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe