கோவையில் கணவருடன் சேர்ந்து மதுகுடித்த பெண் சாவு

published 2 years ago

கோவையில் கணவருடன் சேர்ந்து மதுகுடித்த பெண் சாவு

கோவை: கோவை ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதவன் (வயது37). கூலி தொழிலாளி. இவரது மனைவி சூரியபிரியா (34). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மதுகுடித்து வந்தனர்.சம்பவத்தன்று இருவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர்.
அங்கு வழக்கம் போல மது குடித்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலை ஆதவன்
எழுந்தார். அப்போது சூரியபிரியா அசைவின்றி கிடந்ததை அவர் பார்த்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே  ஆம்புலன்சுக்கு  தகவல் தெரிவித்தார்.

அதில் வந்த டாக்டர் சூரியபிரியாவை பரிசோதனை செய்தார். இதில் அவர் ஏற்கனேவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சூரியபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe