வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா : ஆட்சியர் தேசிய கொடியேற்றுகிறார்

published 2 years ago

வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா : ஆட்சியர் தேசிய கொடியேற்றுகிறார்

கோவை: நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாவட்ட ஆட்சியர் சமீரன் விழாவுக்கு தலைமை தாங்கி  தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

வரும் 13ஆம் தேதி வ.உ.சி மைதானத்தில்  போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில்  ஈடுபட உள்ளனர். மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டப் பகுதிகளில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe