லேத் பட்டறையில் ரூ.3.75 லட்சம் திருட்டு- ஊழியர் மீது வழக்கு...

published 7 months ago

லேத் பட்டறையில் ரூ.3.75 லட்சம் திருட்டு- ஊழியர் மீது வழக்கு...

கோவை; கோவை அருகே உள்ள கோவில்பாளையம் எஸ்.எஸ்.குளம் வெங்கடேசா நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (48). இவர், பாப்பநாயக்கன்பாளையம் ஜோதி நகரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். 

இவரது பட்டறையில் சுண்டாக்காமுத்தூர் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ராஜேஷ் பட்டறையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ.3.75 லட்சம் வைத்திருந்தார். அந்த பணம் திருடு போனது. அதன்பின்னர் கிருஷ்ணமூர்த்தியும் வேலைக்கு வரவில்லை. 

இதனால், சந்தேகமடைந்த ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜேஷ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe