கஞ்சா வழக்கு- கோவையில் இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…

published 7 months ago

கஞ்சா வழக்கு- கோவையில் இருவர்  மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 60 கிலோ கஞ்சா  விற்பனைக்கு வைத்து இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த  ரஷீத் (30) மற்றும் கலீல் ரகுமான் (44) ஆகியோர்களை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் அவர்கள் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ரஷீத் மற்றும் கலீல் ரகுமான்  ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். 

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில்  கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ரஷீத் மற்றும் கலீல் ரகுமான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe