ஸ்மார்ட் சிட்டி சாலைகள் எங்களுக்கு இல்லையா..?- போராட்டத்தில் குதித்த கோவை மக்கள்...

published 7 months ago

ஸ்மார்ட் சிட்டி சாலைகள் எங்களுக்கு இல்லையா..?- போராட்டத்தில் குதித்த கோவை மக்கள்...

கோவை: கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அடிப்படை வசதி செய்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் 100 - க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் உள்ளது. இதில் 86-வது வார்டு கோட்டை புத்தூர், ஜமீன்தார் நகர் வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்.எஸ் கார்டன், ரோஜா கார்டன் ஆகிய பகுதிகளில்
சாலை வசதிகள் இல்லாமலும், மழைநீர் வடிகால் இல்லை, பாதாள 
பாதாள சாக்கடை திட்டங்கள் என பல அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் தரமான அங்கன்வாடி மையமும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து பலமுறை 86-வது வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்பொழுது வர எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை தொடர்ந்து 86-வது வார்டில் மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வருவதாகவும் மேலும் அப்பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை போன்ற பணிகளை செய்து தராமல் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் இந்த சாலை மறியல் போராட்டம் ஆனது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களில் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe