அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஏறுதளம்-இறங்குதளம் அமைக்கும் பணி தொடக்கம்

published 2 years ago

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஏறுதளம்-இறங்குதளம் அமைக்கும் பணி தொடக்கம்

கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது செக்மென்ட் தொழில் நுட்ப முறையில் ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

சிட்ராவில் இருந்து வருவோர் பாலத்தை பயன்படுத்தும் வகையில் பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அருகில் இருந்து சி.ஐ.டி. கல்லூரி முன்பு வரை ஏறுதளம் அமைக்கப்படு கிறது. இதற்கான தூண்கள் கட்டுமானம் முடியும் நிலையில் உள்ளது.

அடுத்த கட்டமாக செக்மென்ட் முறையில் கான்கிரீட் ஓடு தளம் அமைக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் இப்பணியை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு போக்குவரத்து போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

இதனையடுத்து போக்கு வரத்து உதவி கமிஷனர் சரவணன் ஓடுதளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தேவைக்கு ஏற்ப கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில் மட்டும் போக்குவரத்தை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தார்.

இதனை யடுத்து ஏறுதளம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முன்பு இருந்து கரூர் வைசியா வங்கி வரை இறங்கு தளம் கட்டுவதற்கான தூண்கள் அமைக்கும் பணியும் வேகமாக நடத்து வருகிறது.

அவினாசி சாலை மேம்பாலத்தில் மொத்தம் 4 இடங்களில் ஏறுதளம் இறங்குதளம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe