கோவையில் தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி சரமாரி தாக்குதல்

published 6 months ago

கோவையில் தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி சரமாரி தாக்குதல்

கோவை: கோவையில் தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் தரணீதரன் (23). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர் நேற்று ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் தரணீதரனிடம் தகராறு செய்தனர்.

பின்னர் அவரை ஆட்டோவில் கடத்திக் கொண்டு செட்டிபாளையம் நோக்கி சென்றனர். பின்னர் மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். தரணீதரன் காயத்துடன் வலியால் துடித்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதத்தில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe