வாலிபரை கத்தியால் குத்திய சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது…

published 6 months ago

வாலிபரை கத்தியால் குத்திய சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது…

கோவை:  கோவை அருகே வாலிபரை கத்தியால் குத்திய சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் மேட்டூரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அந்தோணி (19). இவர் மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது நண்பர் பூமிநாதன் என்பவருடன் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 6 பேர் கும்பல் இருவரிடமும் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பாட்டிலால் அந்தோணியை தாக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூமிநாதன் அவர்களை தடுக்க முயன்றார். 

ஆனால், இதில் அந்தோணிக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்தோணி வலியால் துடித்தார். அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், முன்விரோதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் தாக்குதல் நடத்திய பாப்பநாயக்கன்பாளையம் ஜெயசிங்கபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (20), வடவள்ளி தில்லை நகரைச் சேர்ந்த மெய்யரசு (21), அம்மன்குளம் ராஜீவ் நகரை சேர்ந்த ரதீஷ்குமார் (19) மற்றும் 17, 16 வயதுடைய 3 சிறுவர்கள் என 6 பேரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe