கோவையின் புதிய மேயர்... யார் இந்த ரங்கநாயகி...?

published 6 months ago

கோவையின் புதிய மேயர்... யார் இந்த ரங்கநாயகி...?

கோவை: கோவையின் புதிய மேயராக தி.மு.க கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராக இருந்த கல்பனா ராஜினாமா செய்த நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கணபதிபுதூரை அடுத்த தரணி நகர் 8 வது வீதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் தி.மு.க சார்பில் கோவை மாநகராட்சி 29 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரது கணவர் ராமச்சந்திரன்,  29 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு குகன் என்ற ஆண் குழந்தையும், வாகிணி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ரங்கநாயகி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதிய மேயர் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த செய்திகளில் அப்டேட் செய்யப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe