வடவள்ளி அருகே திமுக மாவட்ட துணை செயலாளர் கார் மீது கல் வீசி தாக்குதல்...

published 6 months ago

வடவள்ளி அருகே திமுக மாவட்ட துணை செயலாளர் கார் மீது கல் வீசி தாக்குதல்...

கோவை: கோவை அருகே உள்ள கணுவாய் டீச்சர்ஸ் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில்(46). தொழிலதிபர். இவர் கோவை வடக்கு மாவட்ட திமுக  துணைச் செயலாளராக உள்ளார். 

நேற்று முன்தினம் இரவு காரை வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார். இந்நிலையில், நள்ளிரவில் அவரது வீட்டில் இருந்த கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 
 

சத்தம் கேட்டு எழுந்த செந்தில் ஓடி வந்து பார்த்தார். அப்போது 2 பேர்  அங்கிருந்து வேகமாக பைக்கில் தப்பி விட்டனர். இது குறித்து செந்தில் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து  அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe