கோவையில் உடல் பருமன் குறித்தான விழிப்புணர்வு மாரத்தான்...

published 6 months ago

கோவையில் உடல் பருமன் குறித்தான விழிப்புணர்வு மாரத்தான்...

கோவை: உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி உட்பட 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 

உடல்பருமன் கட்டுப்பாடு அவசியம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். உடல் பருமனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் 
கோவை விஜிஎம் மருத்துவமனை மற்றும் அத்தலெட்டிக் கிளப் சார்பில் உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்ட பந்தயம்  கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

இதனை மருத்துவர் மோகன் பிரசாத்,மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 10கிலோ மீட்டர்,5 கிலோ மீட்டர்,3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள்,பெண்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பங்கேற்று ஓடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe