சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை...

published 6 months ago

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை...

கோவை: வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும்  தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மாநகராட்சி அலுவலகத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளானது நடைபெறும்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe