எண்ணெய் வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் மோசடி 2 பேர் கைது...

published 6 months ago

எண்ணெய் வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் மோசடி 2 பேர் கைது...

 

கோவை: கேரளாவை சேர்ந்த எண்ணெய் வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கேரள மாநிலம் மலப்புரம் பெரிமாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்க்கீஸ்(46). இவர் அங்கு தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பேரில் அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பி வருகிறார். இந்நிலையில், தொழில் ரீதியாக பழக்கமான கோவை குனியமுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின்(38) என்பவர் கடந்த ஜூன் மாதம் 200 டின் தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்குமாறு ஜோபி வர்க்கீசிடம் கேட்டு கொண்டார். 

இதனையடுத்து ஜோபி வர்க்கீஸ் ரூ. 7.17 லட்சம் மதிப்பிலான தேங்காய் எண்ணெய் டின்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தார். அதனைபெற்று கொண்ட வில்சன் ராபின் ரூ. 1 லட்சம் ரொக்கமாகவும், மீதமுள்ள பணத்திற்கு 2 காசோலைகளையும் ஜோபி வர்க்கீசிடம் கொடுத்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதனையடுத்து வில்சனை ராபினை தொடர்பு கொண்ட ஜோபி வர்க்கீஸ் பணத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். 

ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து ஜோபி வர்க்கீஸ் நேற்று குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் எண்ணெய் வாங்கி ரூ. 6.17 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் வில்சன் ராபின் மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த மேலாளர் அந்தோணி(45) ஆகிய இருவரை கைது செய்தனர். 

அவர்கள் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த முகமத் ஷெரீப் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe