கோவையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

published 6 months ago

கோவையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

கோவை: கோவை-அவினாசி ரோடு மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகர், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில் நாளை (18ம் தேதி) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமானப் பணி நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

காந்திபுரத்தில் அவினாசி  நோக்கி செல்லும் வாகனங்கள் பீளமேடு பையனீர் மில் ரோட்டில் இடது புறம் திரும்பி, காந்திமாநகர் மேம்பாலம் வழியாகச் சென்று, தண்ணீர் பந்தல் ரோடு S Bend வழியாக டைடல் பார்க் ரோடு வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

மேலும், ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, 100 அடி சாலை, சிவானந்தா காலனி பகுதிகளில் இருந்து அவினாசி சாலை வழியாக விமான நிலையம் திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சத்தி ரோடு, கணபதி வினாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு வழியாக அவினாசி ரோடு செல்லலாம்.

மேலும், உக்கடம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிபுதூர் வழியாக L&T Bypass சென்று குறிப்பிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லலாம்.

வாகன ஓட்டுநர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe