கோவையில் டூப்ளிகேட் போலீஸ் கைது!

published 6 months ago

கோவையில் டூப்ளிகேட் போலீஸ் கைது!

கோவை: காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்தவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈச்சனாரியை சேர்ந்தவர் தினேஷ், இவரது வீட்டில் கோத்தகிரியை சேர்ந்த வினு (34) என்பவர், தான் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், மினிஸ்டர் எஸ்கார்டில் பணியில் உள்ளதாகக் கூறி குடியிருந்து வந்தார்.

வீடு பல நாட்களாக பூட்டியே இருந்ததால், சந்தேகமடைந்த தினேஷ் தன்னிடமிருந்த மற்றொரு சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து பார்த்ததில், வீட்டினுள் துப்பாக்கி, போலீஸ் லத்தி, மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு போலீஸ் என பிரின்ட் செய்யப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.

வினு மீது சந்தேகமடைந்ததால் , மதுக்கரை போலீசில் தினேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து டூப்ளிகேட் போலீசைத் தேடி வந்த போலீசார், அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

வினு மீது ஏற்கனவே போலி போலீசார் நடித்தது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பறித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோவைக்கான செய்திகள், அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe