வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- பட்டங்களை வழங்கிய ஆளுநர்...

published 1 week ago

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- பட்டங்களை வழங்கிய ஆளுநர்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர். திரிலோச்சன் மஹாபத்ரா கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.
இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால்  மூலமாகவும் பட்டங்களைப் 
பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண்மை பல்கலை கழக இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இணைவேந்தரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe