திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- கோவையில் ஆசிரியர்கள் போராட்டம்…

published 1 week ago

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- கோவையில் ஆசிரியர்கள் போராட்டம்…

கோவை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் டவுன் ஹால் பகுதியில் உள்ள மாவட்டம் முதன்மை கல்வி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) 31-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை கொண்டு வந்துள்ள அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும்.

முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்,ஆசிரியர் போட்டித் தேர்வு அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது பழைய ஓய்வு திட்டத்தை அமல் படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.ஆனால் தற்பொழுது முதல்வர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் 31 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe