ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றத்தான் வந்துள்ளேன்; கோவையில் காங்கிரஸ் தலைவர் பேட்டி!

published 4 months ago

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றத்தான் வந்துள்ளேன்; கோவையில் காங்கிரஸ் தலைவர் பேட்டி!

கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி  மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில் கொங்கு பகுதியில்  விவசாயிகள் மாநாட்டை மாநாடு நடத்துகின்றனர்  ஆனைமலை நல்லாறு திட்டம் பற்றி மிகப் பெரிய வாதம் நடைபெற்று இருக்கிறது, அதனை நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன். 

விவசாயிகளின் நலன் காப்பதற்கு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது 10 காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலைகளை பார்த்து வருகிறோம் கடன் சுமையால் ஜப்தி  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தவர் பாஜக அந்த சட்டத்தை மறுபடியும் திரும்ப பெற்றார்கள். 

விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகின்ற அரசாக ஒன்றிய பாஜக  அரசு இருக்கிறது என கூறிய அவர், கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த மாநாடு நடைபெறுகிறது. திருப்பதி லட்டு எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கருத்து கூறி உள்ளார்.  லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அங்குள்ள பக்தர்களுக்கு தேவை இல்லாத குழப்பத்தை ஆந்திராவின் அரசு ஏற்படுத்துகிறது. 

அங்கு கொடுக்க பட்ட நெய்  குஜராத் என கூறப்படுகிறது. குஜராத் யார் அந்த கம்பெனி உரிமையாளர் யார் அந்த அறிக்கை கொடுப்பது குஜராத்தில் இருந்து எப்படி வந்தது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe