வடக்கிழக்கு பருவ மழை- பேரிடர் புகார் அளிக்க எளிய முறை- கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

published 4 months ago

வடக்கிழக்கு பருவ மழை- பேரிடர் புகார் அளிக்க எளிய முறை- கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

கோவை: தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையில் பேரிடர் குறித்து புகார் அளிக்கவும், மழையின் அளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட்ட வாரியாக பலத் துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏதுவாக 66 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

மழைகாலங்களில் மழைநீரானது தேங்க வண்ணம் செல்ல ஏதுவாக மழைநீர் வடிகால்கள் வசதி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதற்கு ஏதுவாக குளம், குட்டைகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூலம் தூர்வார

பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீரானது தேங்கா வண்ணம் பொதுப்பணித்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மழை மற்றும் வெள்ளத்தினை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழக அரசு டி.என்.அலார்ட் (TN Alert app) என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் எளிய முறையில் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், டி.என்.அலார்ட் (TN Alert app) செயலின் மூலம், பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளும் வகையிலும், தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம். பேரிடர் காலங்களில் பாதிப்படையக்கூடிய பகுதிகளின் (Vulnerable Area) விவரம், பேரிடர் காலங்களின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளும், மற்றும் தங்களது பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியின் மூலம் எளிய வகையில் புகார் தெரிவிக்கவும் என அறிமுகப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe