கோவையில் 8 நாட்கள் ரத்து செய்யப்பட்ட ரயில்

published 2 years ago

கோவையில் 8 நாட்கள் ரத்து செய்யப்பட்ட ரயில்

கோவை:கோவை-கன்னூா் ரெயில் வடகரை - கன்னூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் கன்னூா் அருகே உள்ள எடக்கோட் - கன்னூா் இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இதனால் இன்று முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 8 நாள்கள் கோவையில் இருந்து மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் கோவை - கன்னூா்
தினசரி விரைவு ரெயில் (எண்: 16608) கோவையில் இருந்து வடகரை வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலானது மேற்கண்ட 8 நாள்களில் வடகரை- கன்னூா் இடையே இயக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe