மதுக்கரையில் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் போதை மருந்து பறிமுதல்- 6 வாலிபர்கள் கைது...

published 1 week ago

மதுக்கரையில் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் போதை மருந்து பறிமுதல்- 6 வாலிபர்கள் கைது...

கோவை: கோவை, மதுக்கரை பகுதியில் 8 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை, மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல் துறையினர் பாலத்துறை சந்திப்பு  அருகே சென்று  வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது  கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் (28), நபில்(30), கோவை பகுதி சேர்ந்த ஜெயக்குமார் (30), அப்துல் நாசர் (36) , ஷாஜகான் (28) மற்றும் சாதிக் பாஷா (29) ஆகிய 6 இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 8 ¾ கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE), கார், ஆட்டோ , இரண்டு சக்கர வாகனம்,  மற்றும் செல்போன் 7 ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe