வடவள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை

published 2 years ago

வடவள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை

கோவை: கோவை வடவள்ளி, சின்மயா நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரிலுள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பாலக்காட்டிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென ஏதோ

சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே பத்மநாபனுக்கு செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்தார்.
பத்மநாபன் தனது தந்தை பாலசுப்ரமணியனுக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறினார். அவர் பத்மநாபன் வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது அறையிலிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 30 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்ரமணியன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe