ஆனைமலையில் கத்தியை வைத்து தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட பெண்ணுக்கு அடி-உதை: உறவினர் கைது

published 2 years ago

ஆனைமலையில் கத்தியை வைத்து தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட பெண்ணுக்கு அடி-உதை: உறவினர் கைது

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்துவருகிறார்.

இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகேயுள்ள கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு குடிபோதையில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த மகேஸ்வரி அங்கு சென்று அவரைக் கண்டித்து அமைதியாக வீட்டுக்குச் செல்லுமாறு கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன், மகேஸ்வரியைத் தகாத வார்த்தைகளால் திட்டிக் கன்னத்தில் அறைந்து தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை அவரிடமிருந்து மீட்டனர்.

இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe