கோவை - மதுரை இடையே நாளை முதல் பயணிகள் ரயில் இயக்கம்

published 2 years ago

கோவை - மதுரை இடையே நாளை முதல் பயணிகள் ரயில் இயக்கம்

கோவை: கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

பயணிகள் வசதிக்காக கோவை - மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கோவை - பழனி, பழனி - மதுரை வழித்தடத்தில் (06462, 06463) ஆகிய எண்களிலும், மதுரை - பழனி, பழனி - கோவை வழித்தடத்தில் (06479, 06480) ஆகிய எண்களிலும் இயக்கப்பட்டு வந்த கோவை - பழனி - மதுரை இணைப்பு

ரயில் வருகிற நாளை (1-ந் தேதி) முதல் கோவையில் இருந்து மதுரைக்கு (16721) என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு (16722) என்ற எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ரயிலாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையில் இருந்து நாளை (1-ந் தேதி) முதல் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16721) இரவு 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16722) பிற்பகல் 12.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe