சங்கிலியால் கட்டி வைத்து 3 நாட்கள் கணவனை புரட்டியெடுத்த மனைவி!

published 10 months ago

சங்கிலியால் கட்டி வைத்து 3 நாட்கள் கணவனை புரட்டியெடுத்த மனைவி!

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை வருவதையும், அந்த ஊடல்கள் தீர்ந்ததும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் அன்பை வெளிப்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், மனைவி ஒருவர் தனது கணவரை சங்கிலியால் கட்டி வைத்து 3 நாட்கள் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து புரட்டி எடுத்திருக்கிறார்.

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தை அடுத்த காட்கேசர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டி நரசிம்மா (வயது 50).

இவருக்கும் இவரது மனைவி பரதம்மா என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. மனைவியின் கொடுமை தாங்காமல் நரசிம்மா வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணவர் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட மனைவி பரதம்மா அவரை, தனது உறவினர்களை வைத்து அழைத்து வந்துள்ளார்.

தொடர்ர்ந்து வீட்டில் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, சங்கிலியால் கட்டி வைத்து மூன்று நாட்களாக மூச்சுத்திணறத் திணறத் தாக்கியுள்ளார்.

இந்த கெடுமைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர், வெகுண்டெழுந்து, அந்த கொடுமைகளை வீடியோவாக பதிவி செய்து போலீசாருக்கு அனுப்பினார்.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சங்கிலியால் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பரிதாபமாக இருந்த நரசிம்மாவை மீட்டனர்.

இதனையடுத்து பரதம்மா மற்றும் அவர்களுக்கு மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago