கோவையில் சொத்து தகராறில் முதியவர் மீது சரமாரி தாக்குதல்- மகன்கள், பேரன் மீது வழக்கு…

published 3 weeks ago

கோவையில் சொத்து தகராறில் முதியவர் மீது சரமாரி தாக்குதல்- மகன்கள், பேரன் மீது வழக்கு…

கோவை: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் நடராஜன்(73). சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சிவானந்தபுரத்தில் நிறைய வீடுகள் உள்ளது. அதில் சில வீட்டை மனைவி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மீதமுள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். 

 

இந்நிலையில், அந்த வீடுகளை தங்களது பெயருக்கு எழுதி வைக்குமாறு நடராஜனின் மகன்கள் ராஜ பிரபு, செந்தில் பிரபு ஆகியோர் கேட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு ராஜ பிரபு, செந்தில் பிரபு, பேரன் பிரகதீஸ்வரன் ஆகியோர் வந்தனர். 

அப்போது அவர்களுக்கிடையே சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜபிரபு இரும்பு ராடால் நடராஜனை தாக்கினார். மற்ற இருவரும் சேர்ந்தும் நடராஜனை சரமாரியாக தாக்கினர். இதில் நடராஜனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் முதியவரை தாக்கிய அவரது மகன்கள் ராஜபிரபு, செந்தில் பிரபு மற்றும் பேரன் பிரகதீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago