போக்சோ குறித்து கோவை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

published 2 years ago

போக்சோ குறித்து கோவை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோவை: கோவை வடவள்ளியில் உள்ள  ஜேசி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஜேசி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உத்தரவின் பேரில், காவல் நிலைய  காவலர் பிரேமா, மற்றும் சரிதா ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு சிறார்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ)  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சட்டம் எவ்வாறு குழந்தைகளுக்கு உதவுகிறது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe