இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்குக் கடத்தி 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன்-அண்ணன் கைது

published 2 years ago

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்குக் கடத்தி 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன்-அண்ணன் கைது

 

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு
படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டிலிருந்து திடீரென மாயமானர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின்  தாயார் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரிடன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியைக் கோவை  அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும் சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்குக் கடத்திச் சென்றுள்ளார்.

அங்குச் சிறுவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மாயம் வழக்கை  போக்சோ வழக்காக மாற்றி  சிறுமியைக் கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் சிறுமியின் அண்ணன் அரவிந்த் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe