கோவையில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய வாலிபர் உட்பட 2 வாலிபர்கள் தற்கொலை

published 2 years ago

கோவையில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய வாலிபர் உட்பட 2 வாலிபர்கள் தற்கொலை

 

கோவை: கோவை விமான நிலையம் துரைசாமி நகரைச் சேர்ந்தவர் முருகேஷன் (வயது 58). விவசாயி. இவரது மகன் குனாசுந்தர் (28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார்.

பின்னர் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பினார். கோவை வந்த அவர் கடந்த சில மாதங்களாக  யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு எடுக்க கோவில்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றார்.

அங்கு 1 வாரமாகத் தங்கியிருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (28). அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்தார். அப்போது அவரது தாயார், கார்த்திக்-கை கண்டித்து  அறிவுரை கூறினார். இதனால்

மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe