பொள்ளாச்சியில் 2-சக்கர வாகனம் வாங்கியதைப் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

published 2 years ago

பொள்ளாச்சியில் 2-சக்கர வாகனம் வாங்கியதைப் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

 

கோவை: பொள்ளாச்சி கோட்டூர்  கரையான் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20), கூலித் தொழிலாளி.

முருகேஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்துக் கிரிக்கெட் விளையாடி நாட்களைக் கழித்து வந்தார். இதனால் அவரது தந்தை, மகன் முருகேஷிற்கு வேலைக்குச் செல்லுமாறு அறிவுரை கூறினார்.

ஆனாலும் அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில்  முருகேஷ் தவணைக்குப்  புதியதாக ஒரு 2-சக்கர வாகனத்தை வாங்கினார். 
இதனைப் பார்த்த அவரது பெற்றோர்  அவரைக் கண்டித்தனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்குச் சென்று விஷத்தைக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றிப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்துக் கோட்டூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர்ச் சம்பவ இடத்துக்கு வந்து  முருகேஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2-சக்கர வாகனம் வாங்கியதைப் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe