தேனியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோவையில் தற்கொலை: காதல் தோல்வியா என விசாரணை

published 2 years ago

தேனியைச்  சேர்ந்த பொறியியல் மாணவர் கோவையில் தற்கொலை: காதல் தோல்வியா என விசாரணை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தேனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). இவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு  பொறியியல் படித்து வந்தார். இவரது தம்பியும் அதே  கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் இருவரும் கல்லூரி அருகிலேயே தனியாக அறை எடுத்து தங்கி வந்தனர்.  

கல்லூரி விடுமுறை என்பதால் அவரது தம்பி ஊருக்குச் சென்றுவிட்டார். ஆகாஷ் மட்டும்  அறையில் தனியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாக ஆகாஷின் அறை கதவு பூட்டிக் கிடந்தது. 
இதனால் சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்கள் ஆகாஷின் அறை கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவைத் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் காதல் தோல்வி காரணமாக ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளளர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe