வலிப்பு ஏற்பட்டு குளத்தில் தவறி விழுந்த கோவையைச் சேர்ந்த தொழிலாளி பலி

published 2 years ago

வலிப்பு ஏற்பட்டு குளத்தில் தவறி விழுந்த கோவையைச் சேர்ந்த தொழிலாளி பலி

கோவை: கோவை கல்லாமேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார் (30), கூலித் தொழிலாளி. இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அரவிந்த்குமார் தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

இன்னிலையில், வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன் தினம் உக்கடம் குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீரென வலிப்பு வந்து குளத்தில் தவறி விழுந்தார்.

இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe