செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

published 2 years ago

செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

 

கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர்ப் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்குச்  சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளே தூங்கச் சென்றார்.

காலை எழுந்து வந்து வெளியே பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

தனது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை அறிந்த அவர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சாம்பிரவின் (19) மற்றும் நிகில் (20) ஆகியோர் பிரிசனின் மோட்டார் சைக்கிளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையியனர் மோட்டார் சைக்கிளைத் திருடிய நிகிலை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர் சாம்பிரவினை தேடி வருகின்றனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe