சிங்காநல்லூர் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த திருநங்கைக்குக் கத்திக்குத்து

published 2 years ago

சிங்காநல்லூர் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த திருநங்கைக்குக் கத்திக்குத்து

கோவை: கோவை சூலூர் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 33 வயது திருநங்கை. இவர் நேற்று தனது சக திருநங்கைகளுடன் பணம் கேட்டுக்கொண்டு திருச்சி சாலை காமாட்சிபுரம்  பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த திருநங்கைக்கு ஏற்கனவே பழக்கமான, டாஸ்மாக்கில் பணிபுரியும் மேகநாதன், பூபாலன் என்பவர்கள் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் திருநங்கையிடம் பேச்சுக் கொடுத்தனர். மேலும் உல்லாசமாக இருக்கத் திருநங்கையை அழைத்தனர்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேகநாதன் மற்றும்  பூபாலன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கையின் கழுத்து மற்றும் தோள் பட்டையில் சரமாரியாகக் குத்தினர்.

அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த 2 பேரும்  அங்கிருந்து தப்பிச் சென்றனர். கத்தி குத்தில் காயம் அடைந்த திருநங்கையை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.  

இதையடுத்து  திருநங்கை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தித் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி  வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe