திருமணம் ஆன மறுநாளே கோவையைச் சேர்ந்த புதுப் பெண் விஷம் குடித்து தற்கொலை

published 2 years ago

திருமணம் ஆன மறுநாளே கோவையைச் சேர்ந்த புதுப் பெண் விஷம் குடித்து தற்கொலை

கோவை: பாலக்காடு அருகே திருமணமான மறுநாளே பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி உடையகுளத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி; மனைவி பொன்னாத்தாள்.

இவர்களின் மகள் நந்தினி (22). பழங்குடி மக்களான இவர்கள், பாலக்காடு மாவட்டம், செம்மணாம்பதி, அழகாபுரி காலனியில் குடும்பத்துடன் தங்கி தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பெற்றோர் நிச்சயித்தபடி, பொள்ளாச்சி காளியாபுரத்தைச் சேர்ந்த கெவின் என்பவருக்கும், நந்தினிக்கும் கடந்த ஞாயிறு அன்று, பெண் வீட்டில் திருமணம் நடந்தது. மறுநாள் மாலை இவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நந்தினி விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

கொல்லங்கோடு காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe