கார் வெடிப்பு சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டவர் மீது வழக்கு

published 2 years ago

கார் வெடிப்பு சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டவர் மீது வழக்கு

கோவை: கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அளவில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு  கிஷோர் கே. சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதுபற்றி கண்காணித்து வந்த கோவை சைபர் கிரைம் போலீசார்  கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி 153 வது பிரிவின் கீழ்  கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe