கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகள் பலி: பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது பரிதாபம்

published 2 years ago

கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகள் பலி: பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது பரிதாபம்

கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17).

கவுரி அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளைப் பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார்.

அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். அப்போது அந்த வழியாகத் திருவனந்தபுரத்திலிருந்து வேகமாக வந்த கண்டைனர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து  கோபகுமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் தந்தை, மகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தந்தை-மகள் உடல்களை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பீகாரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe