வால்பாறையில் கோவிலை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

published 2 years ago

வால்பாறையில் கோவிலை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுப்பாடி பகுதியில்  பூமாரியம்மன்  கோவில் உள்ளது. இந்த கோவிலை அதிகாலை 3 காட்டு யானைகள் சேதப்படுத்தியது.  

கோவிலின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி கருவறையிலிருந்த பொருட்களை வெளியே இழுத்துப் போட்டுச் சேதப்படுத்தியது. அந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் யானைகளை அங்கிருந்து விரட்டினர்.  

இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து தூக்கமின்றி உள்ளனர். ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை ஊருக்குள் புகாமல் தடுக்க வேண்டும்.

அதற்கு வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்துப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி, கவுன்சிலர்  அன்பரசன் ஆகியோர் சேதமடைந்த கோவிலைப் பார்வையிட்டார் ‌.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe